அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சுமார் 40 ஆயிரம் போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்று அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார். 6 மாநிலங்களில் சிலாங்கூர் மாநிலமே பெரும் பரபரப்புக்குரியதாக கருதப்படுகிறது. அம்மாநிலத்தில் 56 தொகுதிகளிலும் பரபரப்பும், பதற்றமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் சீராகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு போதுமான போலீஸ்காரர்களின் எண்ணிக்கையும், பலமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையில் எடுக்க வேண்டாம் என்பதையே தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக ரஸாருடின் ஹுசெயின் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் சமூக வலைத்தளப்பதிவுகள், உரைகள் என அவர்கள் சம்பந்தப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக ரஸாருடின் ஹுசெயின் விளக்கினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


