மாநில எதிர்க்கட்சியாகச் செயல்பட அம்னோ தயாராக இருந்தபோதிலும், நெகிரி செம்பிலானில் நிலவும் சூழல் இன்னும் தெளிவாக இல்லை என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி, துவான்கு முஹ்ரிஸ் துவான்கு முனாவீர் வெளிப்படுத்திய கருத்துக்களையும் கவனத்தில் கொண்டதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த பிரச்சினையை தீர்க்கமான நெருக்கடியாக கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச வழிகாட்டுதல்கள் மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு இணங்க, முடியாட்சியைப் பேணிக்காப்பதிலும், மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதிலும் ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தாங்கள் அரச ஆணையை மதித்து நடப்பதாலும், மந்திரி பெசார் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பதன் மூலம் நிலைத்தன்மையை உறுதி செய்ய முயல்வதாலும், அத்தகையதொரு கேள்விக்கே இடமில்லை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தல் வரை, எதிர்க்கட்சியில் இணைவது உட்பட, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநிலப் பிரிவு தயாராக இருப்பதாக நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுதீன் அலையஸ், சனிக்கிழமையன்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








