Jun 24, 2026
Thisaigal NewsYouTube
சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி
தற்போதைய செய்திகள்

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

Share:

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், சபா மாநிலத்தின் குடாட் மற்றும் சண்டக்கான் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 5 லட்சம் ரிங்கிட்டை தமது தனிப்பட்ட நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையான ஒய்.எஸ்.ஐ.ஜேவின் அறங்காவலர் தான் ஸ்ரீ அவின்தர்ஜித் சிங், சபா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூரிடம் 5 லட்சம் ரிங்கிட் நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

ஒய்.எஸ்.ஐ.ஜே மூலம் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியானது, கடந்த ஏப்ரல் மாதம் குடாட் மற்றும் சண்டக்கான் மாவட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவிபத்துகளின் புள்ளி விவரங்களின் படி, குடாட் பகுதியில், 8 வீடுகள் தீக்கிரையானதில், 18 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும், சண்டக்கான் பகுதியில் 1,050 வீடுகள் தீக்கிரையானதில், 914 குடும்பங்களும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்

பண்டார் சன்வேயில் 20 வயது மாணவி மரணம் - அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர் கைது

பண்டார் சன்வேயில் 20 வயது மாணவி மரணம் - அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர் கைது