Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மனநலப் பாதிப்பைப் போல் நடித்த வெளிநாட்டு தம்பதியர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.13-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இடையூறு விளைவித்தற்காக ஏர் ஆசியா விமானத்தில் பயணிப்பதிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சீன தம்பதியர், நல்ல மனநிலையில் உள்ளனர் என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

விமானத்தில் இடையூறு விளைவித்தப் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு தாங்கள் இலக்காகக்கூடும் என்று கருதிய கணவனும், மனைவியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல் நடிக்கத் தொடங்கினர்.

எனினும் அத்தம்பதியர், செர்டாங் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்பட்ட போது, அவர்கள் மனோரீதியாக ஆரோக்கியமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவ்விருவரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று KLIA போலீஸ் தலைவர் Alnbany Hamzah தெரிவித்தார்.

பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு விளைவித்த சட்டத்தின் கீழ் அத்தம்பதியர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி