Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மனநலப் பாதிப்பைப் போல் நடித்த வெளிநாட்டு தம்பதியர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.13-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இடையூறு விளைவித்தற்காக ஏர் ஆசியா விமானத்தில் பயணிப்பதிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சீன தம்பதியர், நல்ல மனநிலையில் உள்ளனர் என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

விமானத்தில் இடையூறு விளைவித்தப் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு தாங்கள் இலக்காகக்கூடும் என்று கருதிய கணவனும், மனைவியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல் நடிக்கத் தொடங்கினர்.

எனினும் அத்தம்பதியர், செர்டாங் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்பட்ட போது, அவர்கள் மனோரீதியாக ஆரோக்கியமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவ்விருவரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று KLIA போலீஸ் தலைவர் Alnbany Hamzah தெரிவித்தார்.

பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு விளைவித்த சட்டத்தின் கீழ் அத்தம்பதியர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்