Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லஞ்சம் பெற்றது, மாவட்ட போலீஸ் தலைவர் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்றது, மாவட்ட போலீஸ் தலைவர் கைது

Share:

சட்டவிரோத கேளிக்கை மையங்களின் நடத்துநர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்தது தொடர்பில் பகாங் மாநிலத்தில், மாவட்ட போலீஸ் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

லைசென்ஸின்றி செயல்பட்டு வந்த கேளிக்கை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பத்து லட்சம் வெள்ளி வரை அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கையூட்டு பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
53 வயதான அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பத்து லட்சம் வெள்ளியை பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News