Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சபாவின் 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாதது ஏன்? - நாடாளுமன்றத்தில் நாளை பிரதமர் அன்வார் விளக்கம்!
தற்போதைய செய்திகள்

சபாவின் 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாதது ஏன்? - நாடாளுமன்றத்தில் நாளை பிரதமர் அன்வார் விளக்கம்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

சபா மாநிலத்திற்கு 40 விழுக்காடு வருவாய் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த விரிவான விளக்கம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்யாமல் இருப்பதற்கான காரணத்தையும், சில அம்சங்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவது குறித்தும் நாளை விளக்கமளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அன்வார், ஒவ்வொரு அமைச்சரும் நீண்ட நேரம் யோசித்த பிறகு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமை, மத்திய அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு