May 14, 2026
Thisaigal NewsYouTube
சபாவின் 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாதது ஏன்? - நாடாளுமன்றத்தில் நாளை பிரதமர் அன்வார் விளக்கம்!
தற்போதைய செய்திகள்

சபாவின் 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாதது ஏன்? - நாடாளுமன்றத்தில் நாளை பிரதமர் அன்வார் விளக்கம்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

சபா மாநிலத்திற்கு 40 விழுக்காடு வருவாய் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த விரிவான விளக்கம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்யாமல் இருப்பதற்கான காரணத்தையும், சில அம்சங்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவது குறித்தும் நாளை விளக்கமளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அன்வார், ஒவ்வொரு அமைச்சரும் நீண்ட நேரம் யோசித்த பிறகு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமை, மத்திய அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

முதியவர் கொலை: தூய்மைப் பணியாளர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டு

முதியவர் கொலை: தூய்மைப் பணியாளர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டு

மாணவர்கள் நடுரோட்டில் மோதல்: எஸ்.எம்.கே அமான் ஜெயா மாணவர்கள் வன்முறை

மாணவர்கள் நடுரோட்டில் மோதல்: எஸ்.எம்.கே அமான் ஜெயா மாணவர்கள் வன்முறை

பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, முதுகலைத் திட்டங்களைக் கொண்டுவர அரசு திட்டம்: அமைச்சர் ஜம்ரி

பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, முதுகலைத் திட்டங்களைக் கொண்டுவர அரசு திட்டம்: அமைச்சர் ஜம்ரி

மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக  நீடிப்பு

மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக நீடிப்பு

டி20 பிரிவினருக்கு புடி95 எரிபொருள் மானியம் தொடரும்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

டி20 பிரிவினருக்கு புடி95 எரிபொருள் மானியம் தொடரும்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்