Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தூக்கிலிருந்து தப்பினார் வங்காளதேசத் தொழிலாளர்
தற்போதைய செய்திகள்

தூக்கிலிருந்து தப்பினார் வங்காளதேசத் தொழிலாளர்

Share:

கட்டுமான நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளரின் தலையை கோடாரியினால் வெட்டிக் கொன்ற வங்காளதேசத் தொழிலாளர் ஒருவர் தூக்குத் தண்டனையிலிருந்து இன்று தப்பினார்.

38 வயதான ஷொஹெல் என்ற அந்த வங்காளதேசத் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பதிலாக 33 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 பிரம்படித் தண்டனையும் புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் விதித்தது.

அதேவேளையில் அந்த வங்காளதேசத் தொழிலாளி குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றவாளியே என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கன்டார் அபாங் ஹாஷிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி கோலசிலாங்கூர், ஜெராம், அலாம் ஜெயா- வில் உள்ள ஒரு கட்டுமானத்தளத்தில் தனது மேற்பார்வையாளரான 29 வயது பொலவுஸ் குமார் என்பவரை கோடாரியினால் வெற்றிக் கொன்ற குற்றத்தற்காக 2019 ஆம் ஆண்டு ஷா ஆலம் , உயர் நீதிமன்றம் அந்த வங்காளதேசத் தொழிலாளருக்கு தூக்குத் தண்டனை விதித்தது.

Related News