தண்டவாளப் பகுதியில் மரம் விழுந்ததைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு கே.டி.எம் கொமுட்டர் மற்றும் இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இன்று இடையூறு ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலின்படி, மரம் விழுந்ததில் ரயில் பாதையுடன் தொடர்புடைய மேல்நிலை மின்கம்பி அமைப்பும் பாதிக்கப்பட்டதால் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கே.டி.எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கெப்போங்கிற்கும், ரவாங்கிற்கும் இடையில் ரயில் இருப்புப்பாதையில் மரம் விழுந்ததில் ரயில் பாதையுடன் தொடர்புடைய மேல்நிலை மின்கம்பி அமைப்பும் பாதிக்கப்பட்டதால் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
இதன் காரணமாக சில ரயில் பயணங்கள் 60 நிமிடங்களுக்கு மேல் தாமதமானதாக அது குறிப்பிட்டுள்ளது. .
கே.டி.எம்.பி தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை அகற்றி, மின்சார அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகள் தங்களது பயணத்திற்கு முன் கே.டி.எம்.பி-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் சமீபத்திய தகவல்களைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.








