நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 1,252 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளிலும் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,273 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் மேலும் 4,216 பேர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சீனாவிலும் 541 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 வெளிநாட்டினரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
வெள்ளத்தால் மலைப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் அழிந்துள்ளதால், நிவாரணப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.








