Aug 7, 2026
Thisaigal NewsYouTube
மித்ரா தொடர்பில் ஜோகூர் சுல்தானுடன் டத்தோ ரமணன் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

மித்ரா தொடர்பில் ஜோகூர் சுல்தானுடன் டத்தோ ரமணன் சந்திப்பு

Share:

மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான்,சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார்ரை இன்று புதன்கிழமை மதியம் அவரின் அரண்மனையில் அதிகாரப்பூர்வமாகச் சந்தித்தார்.

மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தீர்வுக்குரிய வழிமுறைகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா செயலகத்தின் வழி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்தியர் நலன் சார்ந்த செயல் நடடிவடிக்கைகள் குறித்து சுல்தான் இப்ராஹிம்மிற்கு டத்தோ ரமணன் விளக்கமளித்தார்.

இச்சந்திப்பின் போது வைஎஸ்ஆர் எனப்படும் சுல்தான ரொகாயா அறவாரியத்துக்கும் , மித்ராவுக்கும் இடையிலான ஒரு கூட்டு ஒத்துழைப்புக்கு சுல்தான் இப்ராகிம் இணக்கம் தெரிவித்தார். இதன் அடிப்படையில், ஜொகூர் மாநில இந்தியர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மித்ராவும் கைகொடுக்க முனைந்துள்ளது.

இது தொடர்பாக சுல்தான் இப்ராஹிம் மேலும் பேசுகையில், ஜொகூர் அரச அறவாரியங்கள் அனைத்தும் தமது மேற்பார்வையில் உள்ளன என்றும் ஜோகூர் மக்களுக்கு உதவ விரும்புகின்றவர்கள் யாராக இருந்தாலும், இந்த அறவாரியங்களுடன் இணைந்து பங்காற்ற தாம் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார. ஜோகூர் சுல்தானின் இந்த அழைப்பானது, அவரின் அதிகாரப்பூர்வ முகநூலிலும் பதிவிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் சுல்தான ரொகாயா அறவாரியத்தின் தலைவர் டத்தோ ஆர்.சுகுமாறனும் கலந்து கொண்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!