May 6, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.22-

வரவிருக்கும் சீனப் புத்தாண்டு கால நெரிசலைச் சமாளிக்க, பிப்ரவரி 12 முதல் 24 ஆம் தேதி வரை 150 கூடுதல் உள்நாட்டு விமானச் சேவைகளையும் சேர்த்து மொத்தம் 4,434 விமானங்களை இயக்கவுள்ளதாக ஏர்ஏசியா விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இதுவே மிகவும் பரபரப்பான பண்டிகைக் காலப் பயணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியர்கள் மலிவான கட்டணத்தில் பயணம் செய்வதை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு ஆதரவாக, ஒருவழிப் பயணக் கட்டணத்தை அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக ஏர்ஏசியா நிர்ணயித்துள்ளது. இந்தச் சலுகை விலையில் 20 கிலோ இலவசப் Baggage வசதியும் அடங்கும்.

இது குறித்து ஏர்ஏசியா மலேசியாவின் பொது மேலாளர் Datuk Captain Fareh Mazputra கூறுகையில், "தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா இடையே தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கு இந்த மானிய விலைக் கட்டணங்கள் பொருந்தும். கூடுதல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பயணிகள் இன்னும் தாராளமாகத் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்," எனத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 61 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஏர்ஏசியா, மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பண்டிகையைக் கொண்டாட இந்த மலிவு விலை மற்றும் கூடுதல் சேவைகள் பெரிதும் உதவும் என நம்புகிறது.

Related News

22 வார கருவை கலைத்து பிறப்பை மறைத்ததாக காதல் ஜோடி கைது

22 வார கருவை கலைத்து பிறப்பை மறைத்ததாக காதல் ஜோடி கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு