May 23, 2026
Thisaigal NewsYouTube
நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய முன்னணி புறக்கணிக்கப்படாது
தற்போதைய செய்திகள்

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய முன்னணி புறக்கணிக்கப்படாது

Share:
கிளந்தான், ஜூலை 13-

கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைதேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் தேசிய முன்னணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை தங்கள் தரப்பு புறக்கணிக்காது என குவா முசாங் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் அஷாருன் உஜி தெரிவித்தார்.

பக்கத்தான் ஹராப்பான்னின் உயர்மட்ட தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவுக்கு, தாங்கள் கட்டுப்படுவதாகவும் அவர் கூறினார்.

அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த இடைத்தேர்தலில், பெரிகாடன் நேஷனல்லிடமிருந்து நெங்கிரி சட்டமன்ற தொகுதியை, தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு, தங்கள் தரப்பு முழுவீச்சில் தேர்தல் பணிகளை ஆற்றும் எனவும் அஷாருன் உஜி உத்தரவாதம் அளித்தார்.

Related News

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய முன்னணி புறக்கணிக... | Thisaigal News