குச்சிங், ஜூலை 3-
PIECEMEAL மற்றும் STRINGER எனப்படும ஊடகத் துறையை சேர்ந்த ஏறத்தாழ 600 ஒப்பந்த அல்லது தற்காலிக பணியாளர்கள் சொக்சோவின் கீழ் இனி பயன்பெறத் தொடங்குவர்.
இம்மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி அது நடப்புக்கு வந்ததாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இனி சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு சொச்கோவின் பாதுகாப்பு நல்கப்படும்.
அவர்கள் கவலையின்றி தங்கள் வேலைகளை மேற்கொள்ளலாம் என அவர் கூறினார்.
அது குறித்து முன்னதாக தொடர்பு அமைச்சின் கீழுள்ள சில நிறுவனங்களுடன் துல்லியமாக ஆராயப்பட்டதாக ஃபாஹ்மி குறிப்பிட்டார்.








