Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, டிசம்பர்.02-

காப்பரல் அந்தஸ்தில் உள்ள போலீஸ்காரர் ஒருவர், மளிகைக்கடையில் நுழைந்து கொள்ளையிட்டதாக கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

44 வயது முகமட் இர்ஃபான் அஸியாடி அப்துல் அஸிஸ் என்ற அந்த போலீஸ்காரர், மளிகைக்கடை உதவியாளரான பாகிஸ்தான் பிரஜையை மடக்கி 400 ரிங்கிட்டை கொள்ளையிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த போலீஸ்காரர், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மாலை 6.20 மணியளவில் பெங்காலான் செப்பா, கம்போங் பெரிஸ் ஜம்புவில் உள்ள மளிகைக்கடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

இதே போன்று கடந்த நவம்பர் 10 ஆம் தேதி அந்த போலீஸ்காரர், மற்றொரு மளிகைக்கடையில் நுழைந்து பாகிஸ்தான் ஆடவரைப் பொருட்களைக் கொள்ளையிட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு