ஜூலை 13-
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மிகச் சிறந்த திட்டமாக SSPA- பொதுச் சேவை ஊதிய முறை விளங்கும் என டத்தோ ஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் டிசம்பர் தொடங்கி அரசு ஊழியர்களின் ஊதியம் 13 விழுக்காடு அதிகரிக்கவுள்ளது.
அதன் மூலம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பலனடைவர்.
SSPA-வை செயல்படுத்துவதற்கு என அரசு 150 ஆயிரம் கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் மேற்கோள்காட்டினார்.
பொதுச் சேவையின் தரத்தையும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.








