Apr 10, 2026
Thisaigal NewsYouTube
பந்திங்கில் 4,000 வேலைவாய்ப்புகளுடன் 'ஜாப்-கேர் சிலாங்கூர்' முகாம்
தற்போதைய செய்திகள்

பந்திங்கில் 4,000 வேலைவாய்ப்புகளுடன் 'ஜாப்-கேர் சிலாங்கூர்' முகாம்

Share:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தலைமையில், நாளை ஏப்ரல் 11 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பந்திங் எம்.சி.எஸ் கல்லூரியில் பிரம்மாண்டமான ஜாப்-கேர் சிலாங்கூர்' வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் 4,000-க்கும் மேற்பட்ட காலியிட வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. குறைந்தபட்சச் சம்பளம் 1,700 ரிங்கிட் முதல் தொடங்குகிறது. தகுதியுள்ளவர்களுக்கு 3,000- ரிங்கிட்டுக்கும் அதிக ஊதியத்தில் 'ஜாப்-கேர் பிரீமியம்' வேலைகளும், நேர்முகத் தேர்வின் மூலம் அன்றைய தினமே பணி நியமனம் பெறும் வாய்ப்பும் உண்டு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் கைதிகளுக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புடன் சுகாதாரப் பரிசோதனைகள், எஸ்.டி.ஆர், இ-காசே,ஜே.கே.எம் போன்ற உதவித்தொகை விண்ணப்பங்கள் மற்றும் எல்.எச்.டி.என், பெர்கேசோ, இ.பி.எஃப் போன்ற முக்கிய அரசு முகமைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.

வேலை தேடுபவர்கள் தங்களின் ரெசுமே மற்றும் ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News

கரோக்கே  மையத்தில் ரகளை: 34 பேருக்கு அபராதம் விதிப்பு

கரோக்கே மையத்தில் ரகளை: 34 பேருக்கு அபராதம் விதிப்பு

பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்: ரஃபிஸி மீது நடவடிக்கை கோருவோருக்கு அன்வார் அறிவுரை

பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்: ரஃபிஸி மீது நடவடிக்கை கோருவோருக்கு அன்வார் அறிவுரை

விமானக் கட்டணங்கள் 40 விழுக்காடு  வரை உயர்வு: எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ்  நடவடிக்கை

விமானக் கட்டணங்கள் 40 விழுக்காடு வரை உயர்வு: எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் நடவடிக்கை

டீசல் விலை உயர்வு: நெல் சாகுபடியைக் கைவிடத் தயார் என மலேசிய விவசாயிகள் எச்சரிக்கை

டீசல் விலை உயர்வு: நெல் சாகுபடியைக் கைவிடத் தயார் என மலேசிய விவசாயிகள் எச்சரிக்கை

ஊடகத்தின் வாயிலாக நற்பெயர் மேலாண்மை: பினாங்கில் இப்தார் (IPPTAR) நடத்திய சிறப்புப் பயிற்சி

ஊடகத்தின் வாயிலாக நற்பெயர் மேலாண்மை: பினாங்கில் இப்தார் (IPPTAR) நடத்திய சிறப்புப் பயிற்சி

3 வயது சிறுமியைத் துன்புறுத்திய கர்ப்பிணி மற்றும் அவரது தாய் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

3 வயது சிறுமியைத் துன்புறுத்திய கர்ப்பிணி மற்றும் அவரது தாய் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு