May 6, 2026
Thisaigal NewsYouTube
கேமரன்மலையில் ரயில் திட்டம்: பரிசீலனை செய்ய பகாங் அரசு தயார்
தற்போதைய செய்திகள்

கேமரன்மலையில் ரயில் திட்டம்: பரிசீலனை செய்ய பகாங் அரசு தயார்

Share:

குவாந்தான், டிசம்பர்.27-

கேமரன்மலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ரயில் திட்டம் குறித்து பரிசீலிப்பதற்கு பகாங் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக அதன் மந்திரி பெசார் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எனினும் கேமரன்மலையில், தானா ராத்தா (Tanah Rata), பிரிஞ்சாங் (Brinchang) மற்றும் புளூ வேலி (Blue Valley) ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைப்பது குறித்து இதுவரை மாநில அரசுக்கு எந்தவோர் அதிகாரப்பூர்வ முன்மொழிவும் வரவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அத்தகைய திட்டம் எதிர்காலத்தில் முன்வைக்கப்பட்டால், அது அப்பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் இருந்தால், அதனை ஆய்வு செய்ய மாநில அரசு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது கேமரன்மலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக இந்த ரயில் திட்டம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் பொதுமக்களுக்கு வசதி கிடைக்குமானால் அதை நிராகரிக்க மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்