Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கேமரன்மலையில் ரயில் திட்டம்: பரிசீலனை செய்ய பகாங் அரசு தயார்
தற்போதைய செய்திகள்

கேமரன்மலையில் ரயில் திட்டம்: பரிசீலனை செய்ய பகாங் அரசு தயார்

Share:

குவாந்தான், டிசம்பர்.27-

கேமரன்மலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ரயில் திட்டம் குறித்து பரிசீலிப்பதற்கு பகாங் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக அதன் மந்திரி பெசார் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எனினும் கேமரன்மலையில், தானா ராத்தா (Tanah Rata), பிரிஞ்சாங் (Brinchang) மற்றும் புளூ வேலி (Blue Valley) ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைப்பது குறித்து இதுவரை மாநில அரசுக்கு எந்தவோர் அதிகாரப்பூர்வ முன்மொழிவும் வரவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அத்தகைய திட்டம் எதிர்காலத்தில் முன்வைக்கப்பட்டால், அது அப்பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் இருந்தால், அதனை ஆய்வு செய்ய மாநில அரசு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது கேமரன்மலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக இந்த ரயில் திட்டம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் பொதுமக்களுக்கு வசதி கிடைக்குமானால் அதை நிராகரிக்க மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து