நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அச்சட்டத்தை நிலைநிறுத்துவது மீதான தீர்மானம் குறித்து விவாதிக்கும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் அவசர ஆண்டுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
இப்படியொரு அவசரக்கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று 173 உறுப்பினர்கள் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த அவசரக்கூட்டம் நடத்தப்படுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் மே 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மசீச கட்டடத்தில் உள்ள சான் சூன் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்த அவசர ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு 500 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். கூட்டம் நடைபெறும் அன்று கோரம் இல்லா விட்டால் அக்கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


