சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, ரேபிஸ் நோயானது பூனைகளின் மூலமும் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதால் அதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை மற்றும் கால்நடை சேவைத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சரவாக் மாநில துணை முதல்வர் டாக்டர் சிம் குய் ஹியன் தெரிவித்துள்ளார்.
சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோய் தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பதிவு செய்யப்பட்ட கடி மற்றும் கீறல் சம்பவங்களில் பெரும்பாலும் தெருநாய்களைத் தவிர்த்து, பூனைகள் தொடர்புடையதாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தற்போது முக்கிய சவாலாக இருப்பது பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதாகும் என்றும் சிம் குய் ஹியன் குறிப்பிட்டுள்ளார்.








