அம்பாங், பண்டான் பெர்டானா வில் ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் பாராங்கினால் கடுமையாக தாக்கப்பட்டார். லோரி ஓட்டுநரான 43 வயதுடைய அந்த நபர் பாராங்கினால் வெட்டுக் காயங்களுக்கு ஆளானது தொடர்பில் தகவல் பெற்ற 40 வயது மாது, பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த நபரின் மனைவி என்று நம்பப்படும் அந்த மாது கொடுத்த தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மயில் தெரிவித்துள்ளார்.
கைகள், மார்பகம், முதுகு போன்ற இடங்களில் கடும் வெட்டுக்காயங்களுக்கு ஆளான அந்த லோரி ஓட்டுநர் அம்பாங் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் குப்பைக்கூளங்களை சேகரிப்பாளரான 28 வயதுடைய நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இது பழைய பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுவதாக ஏசிபி முகமட் அசாம் இஸ்மயில் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


