கோத்தா திங்கி, அக்டோபர் 05-
ஜோகூர், கோத்தா திங்கி, தேசாரு, பண்டார் பெனாவர் -ரில் ஒரு ஹோட்டலின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு Pan Asia அனைத்துலக ஓட்டுப் போட்டியில் திருநங்கைகளும் கலந்து கொண்டு அரை நிர்வாணமாக ஓடியதாக கூறப்படும் தகவல் தொடர்பில் விரிவான விசாணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கெள்ளப்பட்டுள்ளது.
மலேசிய கலாச்சாரத்திற்கு முரணான இந்த செயல் குறித்து தமது கண்டனத்தை பதிவு செய்த பெனாவர் சட்டமன்ற உறுப்பினர் பௌசியா மிஸ்ரி, உண்மையிலேயே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து இருக்குமானால் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








