Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலாக்கா முதலமைச்சர் இலாகாவின் முன்னாள் உதவி தலைமைச் செயலாளர் கைது

Share:

மலாக்கா, பிப்.4-

மலாக்கா மாநில முதலமைச்சர் இலாகாவின் முன்னாள் உதவி தலைமைச் செயலாளரான 42 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாது கடந்த ஆண்டு உயர் பதவி வகித்து வந்த போது, தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி, லஞ்ச ஊழல் புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷர்டா ஷியேன்ஹா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த பெண் உயர் அதிகாரியை விசாரணைக்கு ஏதுவாக இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் சனிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.

நடக்காத நிகழ்ச்சிகளுக்கு நடந்ததைப் போல் போலி பணக் கோரல்களில் அந்த மாது ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து