Aug 8, 2026
Thisaigal NewsYouTube
திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

Share:

திரெங்கானு மாநிலம் அலூர் துமான் அருகே கோலா திரெங்கானு–குவாந்தான் சாலையில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓட்டுநர் பயிற்சி நிலையத்தின் வேலியில் மோதியதில் 65 வயது முதியவர் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் விபத்து தொடர்பாக பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமது சோபியான் ரெட்சுவான் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மஸ்ஜித் கெலுலுட்டிலிருந்து புலாவ் கெரெங்காவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது காரின் கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கார் சாலையின் வலதுபுறம் சென்று ஓட்டுநர் பயிற்சி நிலையத்தின் வேலியில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்