May 15, 2026
Thisaigal NewsYouTube
இருவர் உயிரிழந்த சம்பவம்: பெண் விவகாரமே காரணமாகும்
தற்போதைய செய்திகள்

இருவர் உயிரிழந்த சம்பவம்: பெண் விவகாரமே காரணமாகும்

Share:

மலாக்கா, அக்டோபர்.15-

ஒரு வங்காளப் பிரஜை, தனது சக நாட்டவரை மிகக் கொடூரமாக வெட்டிக் கொன்ற பின்னர் வீட்டில் காற்றாடியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்திற்கு பெண் விவகாரமே காரணமாகும் என்று மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

மலாக்கா, டுரியான் துங்கால், தாமான் செம்பாக்கா 2 இல் நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 42 வயதுடைய வங்காளதேசப் பிரஜை, உடலில் 21 இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வேளையில் அவரை வெட்டிக் கொன்றதாக நம்பப்படும் ம் 31 வயதுடைய வங்காளதேசப் பிரஜை, வீட்டின் கதவை தாளிட்டுக் கொண்டு, வரவேற்பு அறையின் காற்றாடியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக டத்தோ ஸுல்கைரி குறிப்பிட்டார்.

ஓர் இந்தோனேசியரான தனது மனைவி, சக நாட்டவருடன் அந்தரங்க தொடர்பில் இருப்பதாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அந்த நபர், சக நாட்டவரை வெட்டிக் கொன்ற பின்னர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது, விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ