வரும் சனிக்கிழமை 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல் முடிவு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேர்தல் முடிவுகளை விரைந்து கிடைக்கும் வகையில் தேர்தல் நடைமுறைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் கூறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத்தேர்தலைவிட இந்த ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் விரைந்து கிடைக்கும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை 29 ஆம் தேதி நடைபெற்ற 6 மாநிலங்களுக்கான தேர்தல் வேட்புமனுத்தாக்கலின் போது 245 சட்டமன்றத் தொகுதிகளில் 572 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 181 தொகுதிகளில் நேரடிப்போட்டியும், 51 தொகுதிகளில் மும்முனைப்போட்டியும், 13 தொகுதிகளில் 4 முனைப் போட்டியும், ஒரு தொகுதியில் ஐந்து முனைப் போட்டியும் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணைய்த தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சலே தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


