Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளைப் பாராங்கு கொண்டு மிரட்டிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளைப் பாராங்கு கொண்டு மிரட்டிய நபர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

கோலாலம்பூர், டேசா பண்டானில் இன்று காலை 11 மணியளவில் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்ட கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளைப் பாராங்கை ஆயுதமாகக் கொண்டு அச்சுறுத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.

டேசா பண்டானில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட அங்காடிக் கடைகளை உடைப்பதற்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட், சிலாங்கூர் குடிநீர் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது, திடீரென்று பாராங்குடன் தோன்றிய 43 வயது நபர் ஒருவர், மிரட்டும் தோரணையில் செயல்பட்ட போது, அமலாக்க அதிகாரிகளுக்கும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அமலாக்க அதிகாரிகளை அச்சுறுத்தியதாக நம்பப்படும் நபரிடமிருந்து பாராங் பறிக்கப்பட்டு, அவரைப் போலீசார் கைது செய்ததாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளைப் பாராங்கு கொண்டு மிரட்டிய... | Thisaigal News