Jun 16, 2026
Thisaigal NewsYouTube
காசா பயணத்தில் மலேசியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - விசாரணை செய்யுமாறு புத்ராஜெயா வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

காசா பயணத்தில் மலேசியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - விசாரணை செய்யுமாறு புத்ராஜெயா வலியுறுத்து

Share:

காசாவுக்கான மனிதநேயப் பயணத்தின் போது இஸ்ரேலியப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மலேசியர்கள் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் மலேசியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினர் தற்போது சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காசாவுக்கானகுளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 மனிதாபிமான பயணத்தின் போது இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்ட 28 மலேசியர்கள் கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பாக நாட்டிற்கு திரும்பினர்.

என்றாலும், அவர்களில் பலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி