கோலாலம்பூர், ஜூலை 10-
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற ஒன்றுக்கூடலின் போது, முன்னாள் பெரிக்காத்தான் நெசனல் கூட்டணியை சார்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து சபாநாயகர் அளித்த விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக Universiti Teknologi Malaysia-வின் விரிவுரையாளர் பேராசிரியர் முஹம்மது பாத்தி யூசுப் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தலைமை சபாநாயகர் தன் ஸ்ரீ ஜோஹரி அப்துல், முன்னாள் பெரிக்கத்தான் நெசனல் கூட்டணியைச் சேர்ந்த அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், உறுப்பினர் தகுதி கொண்டிருப்பதாக கூறிய கூற்று தொடர்பாக எதிர்கட்சியினர் அதிருப்தியை வெளியிட்டு இருந்த வேலையில், கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர் அளித்த விளக்கமும் நாடாளுமன்ற சபாநாயகார் அளிக்கின்ற விளக்கத்திலும் முறைபாடுகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்,.








