சுங்கை பாக்காப், ஜூலை 05-
நாளை மறுநாள் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பினாங்கு, சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி வீற்றிருக்கும் இடத்தில் உள்ள சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தை கட்டும் திட்டம் தொடரப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
புதிய கட்டடத்தை கட்டும் திட்டம் இதற்கு முன்பு ரத்து செய்யப்பட்ட போதிலும் அத்திட்டத்தை தொடர்வதற்கு பரிந்துரைத்துள்ளதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
சுங்கைப் பாக்காப் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய பெற்றோரின் பிள்ளைகள் அடிப்படை வசதிகளுடன் தரமான கல்வி வாய்ப்பினை பெறும் வகையில் சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டம் தொடரப்படும் என்ற அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.








