71 வயது மூதாட்டியை மானபங்கம் புரிந்ததாக 23 வயதுடைய ஆடவர், அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஐ.நா. தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவரான ஜுபைர் முசி உல்லா என்ற அந்த ஆடவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் அம்பாங், தாமான் மூடா கடைவரிசைப்பகுதியில் பழைய காகிதங்களை சேகரித்துக் கொண்டிருந்த 71 வயது மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் அந்த அந்நியப் பிரஜை குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


