71 வயது மூதாட்டியை மானபங்கம் புரிந்ததாக 23 வயதுடைய ஆடவர், அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஐ.நா. தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவரான ஜுபைர் முசி உல்லா என்ற அந்த ஆடவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் அம்பாங், தாமான் மூடா கடைவரிசைப்பகுதியில் பழைய காகிதங்களை சேகரித்துக் கொண்டிருந்த 71 வயது மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் அந்த அந்நியப் பிரஜை குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


