71 வயது மூதாட்டியை மானபங்கம் புரிந்ததாக 23 வயதுடைய ஆடவர், அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஐ.நா. தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவரான ஜுபைர் முசி உல்லா என்ற அந்த ஆடவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் அம்பாங், தாமான் மூடா கடைவரிசைப்பகுதியில் பழைய காகிதங்களை சேகரித்துக் கொண்டிருந்த 71 வயது மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் அந்த அந்நியப் பிரஜை குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


