Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத்தின் கீழ் 32 பேர் கைது: சுஹாகாமிடம் மகஜர்

Share:

கோலாலம்பூர், பிப்.5-

பல்வேறு திட்டமிட்ட குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள Gang TR கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 32 பேரை விடுவிக்கக் கோரி ஓர் அரசு சாரா அமைப்பான SUARAM, இன்று மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM-மிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 32 குடும்பங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த மகஜர், SUHAKAM-மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுவாராமின் திட்டமிடல் நிர்வாகி அசுரா நஸ்ரோன் தெரிவித்தார்.

கிள்ளான், காப்பார் மற்றும் கோலசிலாங்கூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இந்த 32 பேரும், 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பதினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது, மனித உரிமை மீறலாகும் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை 48 மணி நேரத்திற்கு பிறகு குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த 32 பேரும் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து அவர்களைச் சந்திப்பதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து