Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத்தின் கீழ் 32 பேர் கைது: சுஹாகாமிடம் மகஜர்

Share:

கோலாலம்பூர், பிப்.5-

பல்வேறு திட்டமிட்ட குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள Gang TR கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 32 பேரை விடுவிக்கக் கோரி ஓர் அரசு சாரா அமைப்பான SUARAM, இன்று மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM-மிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 32 குடும்பங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த மகஜர், SUHAKAM-மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுவாராமின் திட்டமிடல் நிர்வாகி அசுரா நஸ்ரோன் தெரிவித்தார்.

கிள்ளான், காப்பார் மற்றும் கோலசிலாங்கூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இந்த 32 பேரும், 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பதினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது, மனித உரிமை மீறலாகும் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை 48 மணி நேரத்திற்கு பிறகு குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த 32 பேரும் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து அவர்களைச் சந்திப்பதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை