கோத்தா கினபாலு, பிப்ரவரி.28-
சபாவில் நிலவி வரும் வெள்ள பாதிப்பினால் சுமார் 6,910 பேர் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் தெனோம் மாவட்டம் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இன்று காலை 4,500 ஆக இருந்த வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை, மாலை 4 மணி நிலவரப்படி 5,246 ஆக உயர்ந்துள்ளது. அதிகமான மக்கள் தொடர்ந்து நிவாரண மையங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
Beaufort-டில் வெள்ள நிலைமை சீராக உள்ளது. 93 கிராமங்களைச் சேர்ந்த 467 குடும்பங்களைச் சேர்ந்த 1,462 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 35 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.








