Jul 4, 2026
Thisaigal NewsYouTube
சாலையோரம் காணப்பட்ட இரு சிறார்கள் மீட்பு: பராமரிப்பாளரிடம் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சாலையோரம் காணப்பட்ட இரு சிறார்கள் மீட்பு: பராமரிப்பாளரிடம் போலீஸ் விசாரணை

Share:

பாங்கி, ஜூலை.19-

பாங்கி, பண்டார் புக்கிட் மகோத்தா அருகே பெரியவர்களின் கவனிப்பின்றி சாலையோரத்தில் சுற்றித் திரிந்த மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உள்நாட்டவர்களான அச்சிறார்களைப் பொதுமக்கள் நேற்று காலை 11.57 மணியளவில் பாங்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

அச்சிறார்கள் நல்ல நிலையில் இருப்பதும் பராமரிப்பாளர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் ஆரம்பக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. குடியிருப்புக்கு அருகிலுள்ள இடத்தில் பொதுமக்கள் அவர்களைக் கண்டுபிடித்தனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் தொடர்பு கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாங்கி காவல் நிலையத்தில் ஆஜரானதாகக் கூறிய அவர், பின்னர் அவ்விருவரும் பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது