பிரதமர் அன்வார் இபுராகிம் ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் சாலைப் போக்குவரத்து இலாகாவின் அபராதங்களைச் செலுத்துபவர்களுக்கு சிறப்பு கழிவு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
3 நாட்கள் நடகவிருக்கும் மடாணி அரசாங்க ஓராண்டு நிறைவு விஆவில் அரசாங்கத்தின் 102 சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சாலைக் குற்றங்களுக்கான காவல் துறையின் அபராதங்களுக்கு மட்டும் சிறப்புக் கழிவு வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சில ஊடங்கங்கள், அந்த விவகாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு ஜே.பி.ஜே அபராதங்களுக்கு சிறப்புக் கழிவு கொடுக்கப்படும் என செய்தி வெளியிட்டிருந்தன.
அதனை அடிப்படையாகக் கொண்டு ஜேபிஜே முகப்புகளுக்கு வந்த பொது மக்கள் தங்கள் அதிருப்தியையும் கோவத்தையும் வெளிப்படுத்தியதாக மலேசியாகினி செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.
சலைப் போக்குவரத்து காவல் துறையின் முகப்பில் காலை தொடங்கி முற்பகல் 11.00 மணி வரையில் 300க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டது,








