எதிர்வரும் வெள்ளியன்று புக்கிட் ஜலீல் தேசிய விளையாட்டரங்கில் ஜேடிதிஅணியும் தெரெங்கானு ஃப்சி அணியும் மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் இறுதிச் சுற்றில் களமிறங்குகின்றன.
இதன் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்து நெரிசல் நிர்வாகத்திற்கும் 1400 காவல் துறை அதிகாரைகள் பணியில் ஈடுபவர் என செராஸ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த ஆட்டத்தைக் கண்டுகளிக்க 85 ஆயிரம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விளையாட்டரங்கின் அனைத்துக் கதவுகளும் மாலை 6.00 மணிக்குத் திறக்கப்படும்.
பட்டாசு, தலைக்கவசம், கூர்மையான பொருட்கள், மது, குடை, தண்ணீர் போத்தல், லைட்டர், மின் சிகரெட், ஒலிப்பெருக்கி போன்ற பொருட்கள் எடுத்து வரக் கூடாது என காவல் துறை பார்வையாளர்களுக்கு நினைவு படுத்தி உள்ளது.
.








