Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள நிலைமை: பேராக்கில் குறைந்து, வட சரவாக்கில் உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

வெள்ள நிலைமை: பேராக்கில் குறைந்து, வட சரவாக்கில் உயர்ந்தது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமையானது சற்று தணிந்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக, வடக்கு சரவாக்கில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, பேராக் மாநிலத்தில், ஹிலீர் பேரா மற்றும் மஞ்சோங் ஆகிய பகுதிகளில், 42 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹிலீர் பேராவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேரும், மஞ்சோங்கில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.

அதே வேளையில், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் இன்று காலை நிலவரப்படி, 191 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது நேற்று இரவு இருந்த எண்ணிக்கையை விட சற்று கூடுதலாகும்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்