கோலாலம்பூர், ஜூன் 19-
தொலைப்பேசி மோசடியில் மூதாட்டி ஒருவர் 6 லட்சம் வெள்ளியை இழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று பாதிக்கப்பட்ட 70 வயதுடைய அம்மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம் குமார் தெரிவித்தார்.
கடந்த மே மாத தொடக்கத்தில், தம்மை தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தின் (NSRC) அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் அதில் பாதிக்கப்பட்டவர் மீது மோசடி தொடர்பான குற்றப்பதிவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விசாரணையின் நோக்கத்திற்காக பாதிக்கப்பட்டவரின் வங்கியிலிருக்கும் மொத்த தொகையையும் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ய அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கட்டளைக்கு இணங்க பணம் பறிமாற்றம் செய்ததாகவும் பின் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் எம் குமார் அறிவித்தார்.








