காற்று மாசுக் குறியீடு 150 API-ஐத் தாண்டிய பகுதிகளில், குறிப்பாக 200 மற்றும் அதற்கு மேல் பதிவாகும் இடங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை, மலேசிய வானிலை ஆய்வு மையம் மற்றும் மலேசிய விமானப் படை ஆகியவை இணைந்து புகைமூட்டம் பாதித்த பகுதிகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மேக விதைப்பு அவசியமாகியுள்ளது என்றும், இந்த நடவடிக்கையால் மேகங்கள் இலக்கு பகுதிகளை நோக்கி நகருமா என்பதையும் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படும் என்றும் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தோனிசியாவில் இருந்து பரவும் புகைமூட்டம் காரணமாக மலேசியா முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








