Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூன்று நண்பர்கள் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூன்று நண்பர்கள் விடுவிப்பு

Share:

சிரம்பான், நவம்பர்.13-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நண்பர்களைச் சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

29 வயது கே. கவிவர்மன், 30 வயது என். கோபிநாத் மற்றும் 32 வயது எஸ். டினேஸ் குமார் ஆகியோரே விடுதலை செய்யப்பட்ட 3 நபர்கள் ஆவர்.

அந்த மூன்று நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தவறி விட்டதாக நீதிபதி ரொஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்களையும், எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக ரொஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கவிவர்மன், கோபிநாத் மற்றும் டினேஸ் குமார் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் சிரம்பான் அருகில் டத்தாரான் செண்ட்ரலில் 227 கிராம் எடை கொண்ட போதைப் பொருளைக் கடத்தியாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்