ஜோகூர்,ஜூலை 27-
கடந்த புதன்கிழமை ஜோகூர், Skudai, Taman Impian Emas- ஸில் கார் ஒன்றை, போலீஸ் ரோந்துக் கார் விரட்டிச் சென்றது, கடத்தல் சம்பவம் அல்ல என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Balveer Singh Mahindar Singh விளக்கம் அளித்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமாக சம்பந்தப்பட்ட காரை, ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்றதை கண்ட போலீசார், அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும் அந்த கார் நிறுத்தப்படாததைத் தொடர்ந்து Taman Impian Emas-ஸில் தொடங்கி, ஜோகூர் பாரு மாவட்டத்தில் இதர சாலைகள் வாயிலாக அந்த காரை போலீசார் துரத்திச் சென்றதாக Balveer Singh Mahindar தெளிவுபடுத்தினார்.
இச்சம்பவத்தில் போலீஸ் சோதனையிலிரந்து காரை நிறுத்தாமல் சென்ற காதலர்கள் என்று நம்பப்படும் 27 ஆடவரும், 20 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








