May 26, 2026
Thisaigal NewsYouTube
34 மூட நம்பிக்கைக் கோட்பாடுகள் இன்னும் செயல்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது
தற்போதைய செய்திகள்

34 மூட நம்பிக்கைக் கோட்பாடுகள் இன்னும் செயல்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது

Share:

பகாங், டிச.6-

பகாங் மாநிலத்தில் 34 மூட நம்பிக்கைக் கோட்பாடுகள் இன்னும் செயல்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த மூட நம்பிக்கைக் கோட்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுவதாகவும், அவர்கள் சரியான பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GISBH என்ற அமைப்பு மூட நம்பிக்கைக் கோட்பாடுகளை பரப்பி வருவதாகவும், இந்த அமைப்பு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள், இறந்து போன ஒருவரை இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.

இந்த அமைப்புகள் சட்டவிரோதமானவை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை.அதன் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என இஸ்லாமிய சமய விவகாரம், புறநகர் மேம்பாடு, மாநில பூர்வ குடிமக்கள் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Seri Syed Ibrahim Syed Ahmad தெரிவித்தார்.

மக்கள் இது போன்ற மூட நம்பிக்கைக் கோட்பாடுகளை நம்பாமல் இருக்க வேண்டும் எனவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தேகமான செயல்பாடுக; இருப்பது பொது மக்களுக்குத் தெரிய வந்தால், உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு