கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
சுகாதார அமைச்சில் எந்தவித பணியிட மாற்றமும் இல்லாமல் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பணியிடங்களை உருவாக்க பொதுச் சேவைத் துறை வழங்கிய ஒப்புதலை செனட்டர் Dr RA Lingeshwaran வரவேற்றுள்ளார்.
ஆண்டுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் நிதிச் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய பணியிடங்கள், நாட்டின் பொது சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மருத்துவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், நீண்ட காலமாக நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறையால் சுகாதாரத் துறையினர் எதிர்கொள்ளும் சவால்களை தாம் நேரடியாக அறிந்திருப்பதாகவும் Lingeshwaran தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த புதிய பணியிடங்கள் அவர்களின் பணிச் சுமையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சுகாதார சேவைகள் விரைவாகக் கிடைக்கவும் உதவும் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் Lingeshwaran குறிப்பிட்டுள்ளார்.








