கிழக்கு கரையோர பிரதான நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் திமோர் ஃபாசா சாலையில் 118.2 ஆவது கிலோ மீட்டரில் தெமர்லோ அருகில் பெரும் பள்ளம் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலையின் அவசரத்தடம் அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக அந்த நெடுஞ்சாலையை பராமரித்து வரும் ஒப்பந்த நிறுவனமான அனிஹ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் மிக கவனமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளர். அதே வேளையில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை பலகையின் குறியீட்டை பின்பற்றுமாறு இன்றிரவு அனிஹ் பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








