May 6, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.23-

மங்கோலியா முன்னாள் மாடல் அழகி காலஞ்சென்ற அல்தான்துயா ஷாரிபுவின் கொலைக்கு மலேசிய அரசாங்கம் பொறுப்பல்ல என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அரசாங்கத்திடம் இருந்து பெற்ற 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தில், முன்னாள் போலீஸ் அதிகாரிகளான சிருல் அஸ்ஹார் உமார் மற்றும் அஸிலா ஹாட்ரி ஆகியோர் அந்த நேரத்தில் தங்களது அதிகாரப்பூர்வமாகத் கடமையில் இருக்கவில்லை என்பதால், அவர்களது செயலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தீர்ப்பளித்தது.

கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பின்படி, அரசாங்கமும் அப்துல் ரசாக் பாகிண்டாவும் தலா 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்கியிருந்தனர். இந்தத் தொகை கர்பால் சிங் & கோ சட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அரசாங்கம் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதால், அந்த 4.7 மில்லியன் ரிங்கிட் மற்றும் அரசாங்கம் செலுத்திய 25,000 ரிங்கிட் வழக்குச் செலவு ஆகியவற்றை 21 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்