Jan 23, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.23-

மங்கோலியா முன்னாள் மாடல் அழகி காலஞ்சென்ற அல்தான்துயா ஷாரிபுவின் கொலைக்கு மலேசிய அரசாங்கம் பொறுப்பல்ல என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அரசாங்கத்திடம் இருந்து பெற்ற 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தில், முன்னாள் போலீஸ் அதிகாரிகளான சிருல் அஸ்ஹார் உமார் மற்றும் அஸிலா ஹாட்ரி ஆகியோர் அந்த நேரத்தில் தங்களது அதிகாரப்பூர்வமாகத் கடமையில் இருக்கவில்லை என்பதால், அவர்களது செயலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தீர்ப்பளித்தது.

கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பின்படி, அரசாங்கமும் அப்துல் ரசாக் பாகிண்டாவும் தலா 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்கியிருந்தனர். இந்தத் தொகை கர்பால் சிங் & கோ சட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அரசாங்கம் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதால், அந்த 4.7 மில்லியன் ரிங்கிட் மற்றும் அரசாங்கம் செலுத்திய 25,000 ரிங்கிட் வழக்குச் செலவு ஆகியவற்றை 21 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முதலீட்டு மோசடி: ‘டான்ஸ் ஶ்ரீ’ பட்டம் பெற்ற பிரமுகருக்கு 4 நாள் தடுப்புக் காவல் - 300 மில்லியன் ரிங்கிட் வரை முறைகேடு

முதலீட்டு மோசடி: ‘டான்ஸ் ஶ்ரீ’ பட்டம் பெற்ற பிரமுகருக்கு 4 நாள் தடுப்புக் காவல் - 300 மில்லியன் ரிங்கிட் வரை முறைகேடு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர ... | Thisaigal News