அம்னோ உச்சமன்ற உறுப்பினரான இஷாம் ஜலில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியின் அந்த முடிவு நியாயமானது எனவும் தனிநபர் இலாபத்தைக் காட்டிலும் கட்சியின் கொள்கையே முதன்மை எனும் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டார் என ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹமாட் சைடி அப்துல் கடிர்.
இவ்வாறான முடிவு எடுக்கப்படும் என இஷாம் ஜலிலுக்கும் தெரியும் எனக் கூறிய முஹமாட் சைடிகட்சியின் கொள்கைக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்ததால் ஏற்பட்ட விளைவு என சுட்டிக் காட்டினார்.
அம்னோவின் இந்த முடிவு மற்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என கட்சியின் எல்லா நிலை அங்கத்தினருக்கும் இது பொருந்தும் எனவும் முஹமாட் சைடி குறிப்பிட்டார்.








