Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி பெண் மானபங்கம்: போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஓராங் அஸ்லி பெண் மானபங்கம்: போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, செப்டம்பர்.29-

ஓராங் அஸ்லி பெண் ஒருவரை மானபங்கம் செய்ததுடன் அவருக்கு காயம் விளைவித்ததாக போலீஸ்காரர் ஒருவர், பேரா, பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

28 வயது கரிசா காரிம் என்ற அந்த போலீஸ்காரர், மாஜிஸ்திரேட் நூருல் இஸாலினா ரஜாய் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அரச மலேசிய போலீஸ் படையின் பொது செயலாக்கத்திற்கான காலாட் பிரிவின் உலு கிந்தா நிலையத்தைச் சேர்ந்த அந்த போலீஸ்காரர், 21 வயது ஓராங் அஸ்லி பெண்ணுக்கு மானபங்கம் விளைவித்து, அவரைக் காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் பேரா தெங்கா, கம்போங் காஜா, கம்போங் அஸ்லி செண்டெரோங் கெலுபி என்ற பூர்வகுடி கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் அந்த போலீஸ்காரர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து