லஞ்ச ஊழல் தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் முஹமாட் அட்லான் பெர்ஹான்னை கடந்த ஜுன் மாதத்திலிருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தேடி வருகிறது என்று அதன் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார். முகைதீனின் மருமகன் அட்லான் பெர்ஹான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவருடன் தொடர்பு கொள்வதற்கு கடந்த ஜுன் மாதத்திலிருந்து எஸ்பிஆர்எம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார். முன்னதாக, லஞ்ச ஊழல் தொடர்பில் அழைத்து பேச எஸ்பிஆர்எம் அதிகாரிகள் முயற்சித்த போது ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தட்டிக்கழித்து வந்த அட்லான் பெர்ஹான், இறுதியில் அவரை அறவே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


