மலாக்கா, தாமான் பூகீட் செங் வீடமைப்புப் பகுதியில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 7 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
35 வயதுடைய அந்த முன்னாள் போலீஸ்காரர் மலாக்கா, ஆயர் குரோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் எசிபி கிரிஸ்தோப்பர் பதீட் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், 25 வயதுடைய காய்க்கறி வியாபாரியைப் பாராங்முனையில் மடக்கி ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்டது தொடர்பில், அந்த முன்னாள் போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எசிபி கிரிஸ்தோப்பர் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


