May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

Share:

நீலாய், பிப்.19-

கோலாலம்பூர் மாநாகரில் இனி கட்டப்படும் புதிய பள்ளிகள் அடுக்குமாடி பள்ளிகளாகவும், 10 முதல் 17 மாடி வரை கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL அறிவித்து இருப்பது, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூரில் சுருங்கி வரும் நிலப்பற்றாக்குறை பிரச்னையினால் இனி அடுக்குமாடி பள்ளிகள் கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாநகர் மன்றம் அறிவித்து இருப்பதாக கூட்டரசுப் பிரதேசத்திற்குப் பொறுபேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா நேற்று அறிவித்து இருந்தார்.

அதற்கு எதிர்வினையாற்றிய கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், 17 மாடி வரையில் பள்ளிகள் கட்டப்படுவதற்கு அனுமதி என்பது மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News