கடந்த ஆண்டு ஜோகூரில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், போதைப் பொருளை விநியோகிக்கும் 16 கும்பலை முறீயடித்து 98 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
இதனால், 935083 மில்லியன் மதிப்ப்பிலான 5.08 டன் போதைப் பொருளையும் 16.6 மில்லியன் மதிப்பிலான பல்வேறு பொருட்களையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ளதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமாருல் சாமான் மாமாட்தெரிவித்தார்.
போதைப் பொருளை ஒழிக்கும் முயற்சியில் கோகூர் காவல் துறை தமது இலக்கை அடைந்திருப்பதாகவும் கடந்த நல்லதொரு அடைவு நிலையை அது பதிவு செய்துள்ளதாகவும் Kamarul Zaman கூறினார்.
மிகக் குறிப்பாக, மீனவர் துறை முகங்கள், பிபிஆர் வீடமைப்புப் பகுதிகள், ஃபெல்டா பகுதிகளில் Op Tapis சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கமாருல் ஸமான் குறிப்பிட்டார்.








